Wednesday, June 5, 2019

தமிழக இடைத்தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்! தி.மு.க கைப்பற்றும் தொகுதிகள் எத்தனை? மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பெரும்பலான தேசிய ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது

தமிழக இடைத்தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்! தி.மு.க கைப்பற்றும் தொகுதிகள் எத்தனை?
மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பெரும்பலான தேசிய ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழக இடைத்தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்! தி.மு.க கைப்பற்றும் தொகுதிகள் எத்தனை? மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பெரும்பலான தேசிய ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 14 இடங்களில் திமுக வெற்றி பெறும் என இந்தியா டூடே நடத்திய கருத்துகணிப்பில் தெரிவித்துள்ளனர்.
தமிழக இடைத்தேர்தல் முடிவை பொறுத்தே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்குமா? இருக்காதா? என்று கூறமுடியும்.
அதிமுகவுக்கு சட்டசபையில் தற்போது பெரும்பான்மை பலம் ஊசலாடும் நிலையில் உள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பெரும்பலான தேசிய ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் தி.மு.க 15-17 இடங்களில் வெற்றி பெரும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற 22 இடைத்தேர்தல்களில் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பு முடிவை இந்தியா டூடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியா டுடே நடத்தி உள்ள கருத்துக் கணிப்பு முடிவில் திமுக 14 தொகுதிகளிலும் அதிமுக 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்து உள்ளது.
5 தொகுதிகள் இழுபறியாகவே இருக்கும் என்றும் இந்திய டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

முருகன் பூவடி புகுந்த பசும்பொன் தேவரே போற்றி

முருகன் பூவடி புகுந்த பசும்பொன் தேவரே போற்றி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம்
மாவீரர்களுக்கு கள்ளர் முரசு சார்பாக வீர வணக்கம்...
உப்பிட்டு சாப்பிடும் நேரம் எல்லாம் உம் வீரம் பேசுவோம்
குண்டுகள் தாங்கிய உங்கள் நெஞ்சத்தின் வலிமையை பேசுவோம் !
நிழல் ஆட்சியில் உங்களின் நிஜங்களை பேசுவோம் !
தூத்துக்குடி மக்களின் நல்வாழ்வுக்காக
வீர மரணம் பெற்றவர்கள்
என்றும் அழிவதில்லை...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை.
கள்ளர் முரசு சார்பாக வீரவணக்கம்..! வீரவணக்கம்

ஆட்சி பறிபோகும் நிலை! சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு!

ஆட்சி பறிபோகும் நிலை! சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு!
நேற்று இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக கட்சிக்கு 14இடமும்,அதிமுக அணிக்கு 3 இடமும், 5 இடங்களில் இழுபறி நிலை இருக்கும் என்று அறிவித்தனர். இதனால் தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக வராது என்ற நிலை உருவாகியுள்ளதால் அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலோடு காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதையடுத்து மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
இப்போது இந்த இடைத்தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் நடத்திய அந்த கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும் வெல்லும் என சொல்லப்பட்டது. மீதமுள்ள 5 இடங்களில் இரண்டுக் கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் அதானல் அந்த 5 தொகுதிகளில் இழுபறி நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.இப்படியான சூழலில் ஆட்சி இழக்கும் நிலை அதிமுகவுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.திமுகவோடு சேர்ந்து தினகரன் ஆட்சியை கலைக்க முயற்சி செய்வதை தடுக்க சசிகலாவிடம் சமாதானம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச அவரது மனைவியை பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறைக்கு அனுப்பியதாக ஒரு செய்தி வெளியானது.அதை உறுதி செய்யும் விதமாக சசிகலாவை முதல்வர் மனைவி சந்தித்தது குறித்து உறுதியான தகவலை அதிமுக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஓ.பி.எஸ் மனைவியும் சந்தித்தாக கூறப்பட்டது ஆனால் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை

பாராளுமன்ற தேர்தலில் 2 வது முறையாக வென்ற பாரத பிரதமர் மோடிஜி அவர்களுக்கு கள்ளர் முரசு சார்பாக நல்வாழ்த்துக்கள்

பாராளுமன்ற தேர்தலில் 2 வது முறையாக
வென்ற பாரத பிரதமர் மோடிஜி அவர்களுக்கு
கள்ளர் முரசு சார்பாக நல்வாழ்த்துக்கள்

தினகரனுக்கு விழுந்த அடி!

தினகரனுக்கு விழுந்த அடி!
இந்த தேர்தலில் அனைவராலும் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட தினகரனின் அமமுகாவுக்கு எதிர் பார்த்த வாக்கு வங்கி கிடைக்காததால் பெரிய அதிர்ச்சியில் அக்கட்சியினர் உள்ளனர்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல் அதிகமாக காணப்பட்டது.இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் பிரிந்து சென்று தர்மயுத்தம் நடத்தி தனி கட்சி தொடங்குவதாக இருந்தது.பின்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

அதற்குப் பிறகு தினகரன் அதிமுகவில் பிரிந்து அமமுக கட்சி ஆரம்பித்து ஆர்.கே .நகர் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.இதனால் தமிழகத்தில் தனி பெரும் கட்சியாக இந்த தேர்தலில் இடம் பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது.ஆனால் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் போதுமான ஓட்டு வாங்காமல் மிகக் குறைந்த ஓட்டுகள் மட்டுமே வாங்கியதால் அக்கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் புதிதாக களம் கண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சென்னையில் அனைத்து தொகுதியிலும் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.மேலும் தினகரன் இந்த தேர்தலில் கிங் மேக்கராக இருப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அவரது கட்சி வாங்கிய ஓட்டுகளால் அதிமுக கட்சிக்கு பெரிதும் பாதிப்பில்லை என்பதால் அரசியலில் இது தினகரனுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுகவின் பெரிய வெற்றியும், ''ஜீரோ'' பலனும்!! பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்பதால் திமுகவுக்கு எந்த பலனும் இல்லை.

தமிழகத்தில் திமுகவின் பெரிய வெற்றியும், ''ஜீரோ'' பலனும்!!
பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்பதால் திமுகவுக்கு எந்த பலனும் இல்லை.
நடந்து முடிந்த 17வது சட்டமன்றத் தேர்தலில் ஏறக்குறைய 37 இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இவ்வளவு இடங்களில் திமுக வெற்றி வாய்ப்பை எட்டினாலும், மத்தியில் இவர்களது ஆதரவு இல்லாமல் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் தற்போது ஏற்பட்டு இருப்பதால் திமுகவுக்கு எந்த பலனும் இல்லை.