Friday, July 28, 2017

தேவர் சிலைக்காக மக்கள் திலகம் எழுதிய கடிதம் திரு .டி எல் .சசிவர்ண தேவர் அவர்களுக்கு ,

தேவர் சிலைக்காக மக்கள் திலகம் எழுதிய கடிதம்
திரு .டி எல் .சசிவர்ண தேவர் அவர்களுக்கு ,
பேரன்புடையீர் ! வணக்கம் .
காலம் சென்ற தென்பாண்டிசிங்கம் தியாகசீலர் பசும்பொன் ஐயா அவர்களுக்கு உருவசிலை ஒன்று அமைப்பதற்காக உயரிய முயற்சியில்
தாங்கள் ஈடுபட்டிருக்கும் செய்தியே ஏடுகளில் படித்து பெறுவகையுற்றேன் .
வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காகவும் , மக்களுக்காகவும்அரும்பணியாற்றி தியாகத்திற்காகவும் ,நல்அறத்திற்கும்
சிறந்த ஒழுக்கத்திற்காகவும் சீரிய எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய தேவருக்கு நன்றியுள்ள மக்கள் செய்ய வேண்டிய பணிகளில்
முதர்ப்பணியாகும்சிலை அமைப்பது அதீதகைய சிறந்த பணியில் தாங்களும் ஈடுபட்டிருப்பது சாலசிறப்புடையதாகும்அந்த தியாக சீலரை இயற்கை அணைத்துக்கொண்ட அந்நாளில் நானும் நேரில் கண்டு தேவருக்கு என்னுடைய இறுதி வணக்கத்தினை செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததை ,என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத நாளாக எண்ணி எண்ணி உணர்சி கொள்கிறேன் .
லட்சசோப லட்சம் இதயங்களில் ஆடசி செலுத்தும் தேவர் அவர்களுக்கு என்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் செலுத்திக்கொள்ளும் முறையில் ,தாங்கள் ஈடுபட்டிருக்கின்ற முயற்சிக்கு என்னால் இயன்ற பங்கையும் செலுத்த முடிவு செய்துள்ளேன் .
அமைக்கவிருக்கும் தேவர் உருவ சிலைக்கு ஆகும் செலவு முழுவதையும் எனது சொந்த பொறுப்பில் நானே ஏற்றுக் கொள்வது என்று முடிவு செய்திருக்கிறேன் .
அந்த தீயாக சீலருக்கு என் உள்ளத்தில் அடங்கி கிடக்கும் சிறந்த அன்பை செலுத்துவதற்கு எனக்கு வேறு வாய்ப்பு இல்லை ஆதலால் ,என்னுடைய இந்த வேண்டுகோளை ஏற்று கொள்ள வேண்டுகிறேன் ,ஏற்று கொள்வீர்களென நம்புகிறேன் .
தாங்கள் கருணை கூர்ந்து பசும்பொன் ஐயாவினுடைய சிறந்த முழு உருவப்படம் ஒன்றினையும் ,எவ்வளவு பெரிய அளவில் சிலை அமைக்கலாம் என்பது போன்ற தங்களின் சிரிய கருத்தினையும் உடனே எனக்கு தெரிவித்தால் மிக விரைவில் சிலை வடிக்க ஏற்பாடு செய்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .
தங்களுடைய விவரம் கிடைத்தவுடன் சிறந்த சிற்பிகளுடன் தொடர்பு கொண்டு காலம் தாழ்த்தாமல் சிலை செய்ய ஏற்பாடு செய்ய விரும்புவதால் விரைவில் தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்
இது சம்பந்தமாக தங்களிடம் நேரில் கலந்து பேச விரும்புகிறேன் .எப்பொழுது ,எங்கே சாத்தியமாகும் என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன் .
அன்பன்
எம் .ஜி.ராமசந்திரன்
நன்றி
தேவரின புத்தகம்
வி.எஸ் .நவமணி

No comments:

Post a Comment